May 18, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதியின் பதவிக்கால நீட்டிக்க விடுக்கும் கோரிக்கை: நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதியின் பதவிக்கால நீட்டிக்க விடுக்கும் கோரிக்கை: நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.30-

நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எழுந்துள்ள கோரிக்கை தொடர்பான அறைகூவல்களை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடினார்.

இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் துறையில் ஆற்றிய உரையில், தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்கச் சொல்லும் நடவடிக்கையானது, நீதித்துறையை அரசியலாக்குவதற்கான முயற்சி என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் செயல்படும் நீதித்துறை பரிபாலனத்தின் மீது, இத்தகைய வலியுறுத்தல்கள் கூடாது என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் அல்லது நீதிபதிகள், ஓய்வு பெறும் வயதை அடையும் எந்த அதிகாரிக்கும், அவர்களுக்கென்று சொந்த நடைமுறைகள் உள்ளன. ஓய்வு பெறும் வயது என்றால் அவர்கள் தானாக ஓய்வு பெற வேண்டும் என்பதும் அல்ல, தானாகவே அதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.

இதன் பொருள், சுயேட்சையாக மற்றும் சுதந்திரமாக இருக்க வேண்டிய நீதிபரிபாலனத்துறை, அரசியலாக்ப்பட்டு வருகிறது. அது ஒரு பொது அரசியல் விவாதமாக மாறி வருகிறது என்று பிரதமர் சாடினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி