ஈப்போ, ஜூலை.16-
பேராக் மாநிலம் ஈப்போவில் இணைய மோசடி மையங்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இடங்களில் போலீசார் நடத்திய தனித்தனி சோதனைகளில் 18 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 78 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin வெளியிட்டுள்ள தகவலில், கடந்த திங்கட்கிழமை ஈப்போ Hill Permai அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் Taman Tasek Indraவில் Laluan Tasek Timur 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்ட சீன நாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோதனையின் போது, மின்னணு சாதனங்கள், மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை இணைய வழி மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் Mohd Alwi Zainal தெரிவித்துள்ளார்.








