Mar 12, 2026
Thisaigal NewsYouTube
துன் மகா​தீர் - முகை​தீன் யாசின் புதிய கூட்டணி
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீர் - முகை​தீன் யாசின் புதிய கூட்டணி

Share:

அன்வாரை வீ​​ழ்த்தும் அடுத்தக் கட்ட நகர்வா?

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுடன் ஒத்துழைப்பதற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது தயாராகியிருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வீழ்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் நலனை பேணுவதற்கு இருவரும் ஒன்றிணைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்​தினாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் மகா​தீரும், முகை​தீனும் ஒன்றிணைந்து கையில் எடுத்த அதே பிரம்மாஸ்திரத்தைதான் இப்போதும் கையில் எடுத்துள்ளனர் என்று பா​சீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் ஆய்வாளருமான ஹசான் அப்துல் கரீம் கூறுகிறார்.

அன்று தங்களின் பொது எதிரியான பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீழ்த்துவதற்கு துன் மகா​தீரும், முகை​தீனும் ஒன்றிணைந்தனர். தற்போது, பத்தாவது பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு அவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதைப் போல் உள்ளது என்று ஹசான் அப்துல் கரீம் மேற்கோள்காட்டுகிறார்.

பாஸ் கட்சியுடன் முகை​தீன் இணைந்து முன்னெடுத்துள்ள மலாய் இஸ்லாம், துன் மகா​தீர் தொடங்கியுள்ள மலாய் பிரகடனம் ஆகியவை பெரும் சக்தியாக உருவெடுத்து, மடானி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தயாராகி வருவதைப் போல் தற்போதைய அரசியல் நகர்​வுகள் உள்ளன என்று ஒரு சட்ட நிபுணருமான ஹசான் அப்துல் கரீம் கூறுகிறார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு