மெக்ஸ் எனப்படும் மாஜு விரைவுச்சாலையில், போதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டி, வங்காள தேசத்தைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலத்தின் உயிரிழப்புக்கு காரணமான, 31 வயது இராணுவ அதிகாரியின் மீது கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, மாஜு விரைவுச்சாலையில், முசாஹித் மில்லாத்-ஐ கொலை செய்ததாக,ஜாட் ஃபைத் அர்ஹான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அத்துடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், தன் மீதான கொலைக் குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதாக ஜாட் ஃபைத் அர்ஹான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நீதிபதி இல்லி மரிஸ்கா காலிசான், இவ்வழக்கு விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதி நிர்ணயித்துள்ளார்.








