May 24, 2026
Thisaigal NewsYouTube
Pygmy Borneo பாதாளத்தில் இறந்து கிடந்தது
தற்போதைய செய்திகள்

Pygmy Borneo பாதாளத்தில் இறந்து கிடந்தது

Share:

லஹாட் டத்து , செப்டம்பர் 20-

சபாவில் அரிய விலங்கிமான Pygmy Borneo வகையைச் சேர்ந்த யானை ஒன்று, 30 மீட்டர் பாதாளத்தில் விழுந்து, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சபா, லஹாட் டத்து – வில் உள்ள தோட்டம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை அந்த Pygmy Borneo யானை இறந்து கிடந்ததாக சபா மாநில வனவிலங்கு பாதுகாப்பு இலாகா தெரிவித்தது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அந்த யானை தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது என்று அவ்விலாகாவின் இயக்குநர் Roland Oliver தெரிவித்தார்.

அந்த காட்டு யானை எவ்வாறு பாதாளத்தில் விழுந்தது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News