May 21, 2026
Thisaigal NewsYouTube
சுற்றி வளைக்கப்பட்ட 95 சட்டவிரோத குடியேறிகள்
தற்போதைய செய்திகள்

சுற்றி வளைக்கப்பட்ட 95 சட்டவிரோத குடியேறிகள்

Share:

ஈப்போ, ஜன - 71

கடந்த சனிக்கிழமை, ஈப்போ மற்றும் கோப்பேங் பகுதிகளைச் சுற்றியுள்ள 25 வணிக வளாகங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில் மொத்தம் 95 சட்டவிரோத குடியேறிகள் (PATI) கைது செய்யப்பட்டனர்.

13 மணி நேரம் நடந்த அச்சோதனை நடவடிக்கையில் 20 அதிகாரிகள் ஈடுபட்டனர். 7 கடைகள், 7 உணவகங்கள், ஒரு கார் கழுவும் நிலையம், உல்லாச மையம், 8 தனியார் வனிகத் தலங்கள் ஆகியவற்றில் 119 பேர் சாதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதில், இந்தோனேசியா, வங்காள தேசாம், மியான்மார், பாக்கிஸ்தான், கம்போடியா, லாவோச், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 51 ஆண்களும் 42 பெண்களும் கைது செய்யப்பட்டனர்,

மலேசியாவில் தங்கி இருக்க இவர்கள் அனைவருக்கும் முறையான ஆவணமும் அனுமதியும் கிடையாது.

மேலும், வரம்பு மீறிய காலம் மலேசியாவில் தங்கி வந்துள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளை பணியமர்த்தியும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கும் சம்பந்தப்பட்ட முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஷர்மன்ரிஸால் கூறினார்.

Related News