மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 5 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐவரை தவிர அமைச்சர் சிவகுமாரிடம் பணியாற்றி வந்த மற்றொரு அதிகாரி மனித வள அமைச்சிலிருந்து பொதுச் சேவை இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் கூறியது.
லஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் சிவகுமாரின் மூன்று அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கை செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதவள அமைச்சு சம்பந்தப்பட்ட மற்றொரு அதிரடி நடவடிக்கையாக இந்த 5 அதிகாரிகளின் பணி நீக்கம் பார்க்கப்படுகிறது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


