மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 5 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐவரை தவிர அமைச்சர் சிவகுமாரிடம் பணியாற்றி வந்த மற்றொரு அதிகாரி மனித வள அமைச்சிலிருந்து பொதுச் சேவை இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் கூறியது.
லஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் சிவகுமாரின் மூன்று அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கை செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதவள அமைச்சு சம்பந்தப்பட்ட மற்றொரு அதிரடி நடவடிக்கையாக இந்த 5 அதிகாரிகளின் பணி நீக்கம் பார்க்கப்படுகிறது.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


