Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மீனவர் வலையில் ராட்ஷச சுறா மீன் சிக்கியது
தற்போதைய செய்திகள்

மீனவர் வலையில் ராட்ஷச சுறா மீன் சிக்கியது

Share:

செத்தியு, ஜூலை 5-

திரெங்கானு மாநிலத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் 300 கிலோ எடை கொண்ட ராட்ஷச சுறா மீன் சிக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரெங்கானு கடப்பகுதியில் பந்தை தெலக பாப்பான் என்ற இடத்தில் தனது இயந்திரப் படகில் மாட்டப்பட்டிருந்த வலையில் அந்த ராட்ஷச சுறா சிக்கியதாக 57 வயதான ஜமாலுடின் முகமது என்ற அந்த மீனவர் தெரிவித்தார்.

வலையில் அந்த ராட்ஷச சுறா சிக்கியப் பின்னர் அதனை தரைக்கு கொண்டு வருவதில் தமக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை என்றார் அவர்.

வழக்கமாக ஆழ்கடலில் காணப்படக்கூடிய அந்த ராட்ஷச சுறா, சிறு மீன்களை திண்பதற்கு கரையோரமாக வந்திருக்கக்கூடும் என்று தாம் நம்புவதாக அந்த மீனவர் தெரிவித்தார்.

Related News