Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை கொடூரமாக வெட்டிக் கொலை

Share:

தாசேக் குளுகோர், மார்ச்.07-

வெட்டுக்கத்தியை ஆயுதமாக ஏந்திய முகமூடி கும்பல் ஒன்று மியன்மார் பிரஜை ஒருவரைக் கொடூரமாக வெட்டிக் கொன்றது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செபாடு ஜெயாவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் நிகழ்ந்தது.

தலை மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்களுக்கு ஆளான 38 வயதுடைய மியன்மார் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டார்.

நாசி கண்டார் உணவகத்தின் நிர்வாகியான அந்த மியன்மார் பிரஜையிடம் ஏதோ விசாரிப்பது போல் பாவனை செய்த நிலையில், அந்த கும்பல் திடீரென இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

முகமூடி கும்பலில் பிடியில் சிக்கிய அந்த மியன்மார் பிரஜை கடும் வெட்டுக் காயங்களுடன் உணவகத்தை விட்டு தப்பி ஓட முயற்சித்த போது, மயங்கி விழுந்து மாண்டதாகக் கூறப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து