தஞ்சோங் மாலிம்,ஜன.19
இரண்டு அடுக்கு விரைவு பேருந்து ஒன்று, தீப்பற்றிக்கொண்டதில் அதில் இருந்த 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 375.4 ஆவது கிலோ மீட்டரில் தஞ்சோங் மாலிம் அருகில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஓர் அவசர அழைப்பை அதிகாலை 5.19 மணியளவில் சிலிம் ரீவர் தீயணைப்பு நிலையத்தார் பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்டை இயக்குநர் சயானி சைடொன் தெரிவித்தார்.
மிகுந்த பதற்றத்திற்கு ஆளான அனைத்து பயணிகளும் காயமின்றி உயர் தப்பினர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிலிம் ரீவர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள், சுமார் அரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். அதற்கு முன்னதாக அந்த விரைவு பேருந்தில் இருந்த இரண்டு ஓட்டுநர்கள், மூன்று பெண்கள், 14 ஆண்கள் பேருந்தை விட்டு, வெளியேறிவிட்டனர். இத்தீ சம்பவத்தில் அந்த விரைவு பேருந்து 80 விழுக்காடு சேதமுற்றதாக சயானி சைடொன் குறிப்பிட்டார்.








