Dec 30, 2025
Thisaigal NewsYouTube
சிறுமிடம் பாலியல் வல்லுறவு: குற்றச்சாட்டுகளை மறுத்த போலீஸ்காரர் விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

சிறுமிடம் பாலியல் வல்லுறவு: குற்றச்சாட்டுகளை மறுத்த போலீஸ்காரர் விசாரணை கோரினார்

Share:

கங்கார், டிசம்பர்.30-

பெர்லிஸ் மாநிலத்தில், 15 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவர், தமக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

34 வயதான முஹமட் ஃபார்ஹான் அப்துல் காரிம் என்ற அந்த போலீஸ்காரர், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதி அனா ரொஸானா முகமட் நோர் முன்னிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி, இவ்வாண்டு ஜூன், ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில், அவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இடைநிலைப் பள்ளியின் எதிரேயுள்ள பட்டறையின் கார் நிறுத்துமிடத்தில், போலீஸ் வாகனத்தில் வைத்து, அச்சிறுமியை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மேலும், அப்பள்ளியின் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறைகளிலும், ஹோட்டல் ஒன்றிலும் அச்சிறுமியிடம் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

கெடா, பினாங்கில் கொலை, கொள்ளை: 'ரமேஸ் கும்பலை' சேர்ந்த 20 பேர் மீது குற்றச்சாட்டு

கெடா, பினாங்கில் கொலை, கொள்ளை: 'ரமேஸ் கும்பலை' சேர்ந்த 20 பேர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் நாளை முதல் ஜனவரி 1 வரை தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை

சரவாக்கில் நாளை முதல் ஜனவரி 1 வரை தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை