Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி
தற்போதைய செய்திகள்

மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி

Share:

தனது மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக தோட்டத் தொழிலாளி ஒருவர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.

36 வயது ஆர். ரெத்தினசாமி என்று அந்த தோட்டத் தொழிலாளி கடந்த ஜுலை 31 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பினாங்கு, தாசிக் கெலுகோர், லாடாங் மேஃபிஎல்ட் தோட்டத்தில் 35 வயதுடைய தமது மனைவியை எரியூட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் கடும் தீக்காயங்களுடன் அந்த மாது உயிர்த் தப்பிய போதிலும் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ரெத்தினசாமி எரியூட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரெத்தினசாமி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட அந்த நபர், எவ்வித சலனமின்றி காணப்பட்டார்.

தனது மனைவியை எரித்து கொலை செய்வதற்கு கொடூர எண்ணத்தை கொண்டு இருந்த ரெத்தினசாமி, ஓர் உடல் ஊனமுற்றவர் என்ற போதிலும் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படக்கூடாது என்று பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் அமிரா ருசைனி வான் அப்துல் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

ரெத்தினசாமி புரிந்த குற்றத்திற்கு தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அவரை சிறையில் வைக்குமாறு வான் அமிரா ருசைனி வலியுறுத்தினார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை