முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமது யூசோஃப் சின் (Eusoff Chin) இன்று அதிகாலை 1 மணியளவில் தனது 91-வது வயதில் காலமானார். இத்தகவலை அவரது மகள் சுலியானா மற்றும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் இரண்டாவது தலைமை நீதிபதியாக 1994 செப்டம்பர் முதல் 2000 டிசம்பர் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாற்றிய இவரது மறைவு நீதித்துறைக்கு பெரும் இழப்பாகும்.
அன்னாரின் இறுதிச் சடங்கு தொழுகை கிளானா ஜெயாவிலுள்ள அல்-ஹிடாயா பள்ளிவாசலில் நடைபெற்ற பின்னர், கோத்தா டாமன்சாரா பிரிவு 9-ல் உள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








