கோலாலம்பூர்,ஜூலை 28-
நேற்றிரவு கோலாலம்பூர், புக்கில் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில், தொடங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின், Rahman Live in KL 2024 இசை நிகழ்ச்சி பிரமான்டமாக நடைபெற்றது.
இசைப்புயலாக உருவெடுத்து இந்திய சினிமாவின் உச்சம் தொட்ட அவர், தமது இசைகுழுவுடன் இணைந்து நேற்றிரவு நடத்திய இசை நிகழ்ச்சிக்கு, பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM சிறப்பு வருகையளித்திருந்தார்.
அதோடு, அந்நிகழ்ச்சியில், பல இந்திய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில், கிட்டத்தட்ட 33 ஆயிரம் இரசிகர்களின் ஆரவாரம் புக்கில் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்தை அதிர வைத்துள்ளது.








