May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்காக பிரத்தியேக அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டியதில்லை

Share:

கோலாலம்பூர், பிப்.14-

இந்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்காக பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று பகாங் மந்திரி பெசாரும், அம்னோ உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

முஸ்லீம் அல்லாத சமூகங்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் சுதந்திரமாக பாதுகாப்பதற்கும், பின்பற்றுவதற்குமான உரிமையை கூட்டரசு அரசியலமப்புச் சட்டத்தில் ஓர் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த கொள்கையை அம்னோ தொடர்ந்து மதித்து வருகிறது.

இந்த கொள்கையானது, நீண்ட காலமாக நாட்டின் நல்லிணக்கம் மற்றும் வளப்பத்திற்கு அடித்தளமிட்டு இருக்கிறது. இந்நிலையில் முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களை கவனிப்பதற்காக பிரத்தியேக அமைச்சர் பதவியை உருவாக்குவது என்பது அவசியமில்லாத ஒன்றாகும் என்று வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

Related News