Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

Share:

ஜன.3-

எந்தவொரு கைதிக்கும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து, சம்பந்தப்பட்ட கைதியால் மட்டுமே மாமன்னர் தலைமையிலான பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது. பிற தரப்பினர் பரிந்துரைக்க விரும்பினாலும், கைதி நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியது இஸ்தானா நெகாரா.

கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் செய்யப்பட்டக் குற்றங்களுக்கானப் பொது மன்னிப்பு, தண்டனை நிறுத்தி வைப்பு, தண்டனை குறைப்பு வழங்குவது மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும். இது கூட்டர்சு அரசியலமைப்பின் பிரிவு 42 (1) இலும் 41 (2) இலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டத் தண்டனைய இரத்து செய்யவும், இடைநிறுத்தவும் அல்லது குறைக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார் மாமன்னர். இந்த அதிகாரம், மாமன்னர் தலைமையில் செயல்படும் பொது மன்னிப்பு வாரியத்தின் அறிவுரையின் படி செயல்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்று இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது. பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்புக்கான விண்ணப்ப நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’