மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கமான அபிம் தனது 55-வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள வேளையில், அதன் தியாகம், நேர்மை மற்றும் மாணவர் செயல்பாட்டு இலட்சியங்களை நிலைநிறுத்தி வருவதற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அபிம் இயக்கத்தின் முன்னாள் தலைவரான பிரதமர் அன்வார், தனது முகநூல் பதிவில் இந்த மைல்கல் சாதனை என்பது தியாகம், இரக்கம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட ஒரு பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்றார். இந்த இயக்கம் வெறும் சமயப் போதனைகளைத் தாண்டி, நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவளித்தல், எதிர்காலத் தலைமுறையினரைத் தரமான கல்வியின் மூலம் உருவாக்குதல் மற்றும் மனித கண்ணியத்தை நிலைநிறுத்துதல் போன்ற சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஆற்றிய பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அபிம் இயக்கம் தனது 55-வது வயதில், வலுவான சிறப்பு அம்சங்களுடன் சமூகத்திற்குத் தொடர்ந்து அடைக்கலம் தரும் ஒரு ஆலமரமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்திய பிரதமர், "இனிய 55-வது ஆண்டு நிறைவு வாழ்த்துகள் அபிம்" என்று தனது வாழ்த்துகளை நிறைவு செய்தார்








