ஹமாசை ஒரு தீவிரவாத இயக்கம் என பிரதமர் அன்வார் இபுராகிம் சொன்னதே இல்லை என தொடர்பு, பல்லூடக, மின்னிலக்க அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறினார்.
மலேசியாவைப் பொறுத்த வரை, அனைத்துத் தீவிரவாத நடவடிக்கைகளை மட்டுமே கண்டித்து இருக்கிறோம் என்றார் அவர்.
Concerned Lawyers for Justice CLJ வெளியிட்ட அறிக்கையில், பின்விளைவுகளையும் தாக்கங்களையும் கவனமாக பரிசீலித்து, இந்த விவகாரத்தை சமநிலையான, உண்மை அடிப்படையிலான கண்ணோட்டத்துடன் பரிசீலிக்குமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிமை கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இவ்வாறு கூறினார்








