தங்களின் முதலீட்டிற்கான பிராந்திய மையமாக மலேசியாவை உருவாக்கி கொள்வதற்கு சீனாவின் சில முன்னணி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வழக்கமாக, தங்களின் வர்த்தக் பிராந்தியமாக அண்டை நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் சீனாவின் முன்னணி நிறுவனங்கள், முதல் முறையாக தங்களின் வர்த்தகப் பிராந்தியத்தின் மையமாக மலேசியாவை உருவாக்கிக் கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாக, புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை, பிரதமர் துறை பணியாளர்களின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.
சீனாவின் 4 நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர், சீன பயணம் குறித்து அரசு பணியாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். மொத்தம் 17 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் தொடர்பில் சீனாவுடன் மலேசியா கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள்
சீனாவின் முன்னணி நிறுவனம், மலேசியாவைப் பிராந்திய மையமாக உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது
Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


