கோலா சிலாங்கூரில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்தில் அஸிஸ் ஷா 5 பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டார்.
நேற்று இரவு 8.05 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சுமார் 8.10 மணியளவில் அங்கு சென்ற அவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
சுமார் 9.15 மணியளவில், தீயணைப்பு வீரர் ஒருவர் ஆற்றங்கரையில் இருந்து 50 மீட்டர் தூரம் நீந்திச் சென்று அந்த ஆடவரை மீட்டார்.
இந்நிலையில், அந்த ஆடவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சின் பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.








