2026-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு அட்டவணையானது, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்-இன் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எஸ்பிஎம் தேர்வு அட்டவணையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வுக் குழுவின் துணை இயக்குநர் இன்று அமைச்சரிடம் சமர்ப்பித்து, பரிசீலனை மற்றும் ஒப்புதலைப் பெறவுள்ளதாக கல்வித் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மட் அஸாம் ஹமட் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், அட்டவணை இன்று மாலையே வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடகிழக்கு பருவமழை, இவ்வாண்டின் இறுதியில் ஏற்படக்கூடிய புகைமூட்டம் மற்றும் பள்ளி விடுமுறைக் காலம் உள்ளிட்ட காரணிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக முஹம்மட் அஸாம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநில கல்வித்துறையான ஜே.பி.என் , மாவட்டக் கல்வி அலுவலகமாக பி.பி.டி, பள்ளிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்வு அட்டவணை அமைக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.








