Aug 18, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

Share:

2026-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு அட்டவணையானது, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்-இன் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்பிஎம் தேர்வு அட்டவணையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வுக் குழுவின் துணை இயக்குநர் இன்று அமைச்சரிடம் சமர்ப்பித்து, பரிசீலனை மற்றும் ஒப்புதலைப் பெறவுள்ளதாக கல்வித் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மட் அஸாம் ஹமட் தெரிவித்துள்ளார்.

எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், அட்டவணை இன்று மாலையே வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகிழக்கு பருவமழை, இவ்வாண்டின் இறுதியில் ஏற்படக்கூடிய புகைமூட்டம் மற்றும் பள்ளி விடுமுறைக் காலம் உள்ளிட்ட காரணிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக முஹம்மட் அஸாம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநில கல்வித்துறையான ஜே.பி.என் , மாவட்டக் கல்வி அலுவலகமாக பி.பி.டி, பள்ளிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்வு அட்டவணை அமைக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.