Aug 18, 2026
Thisaigal NewsYouTube
உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை
தற்போதைய செய்திகள்

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

Share:

சாலை விபத்தில் உயிரிழந்த 36 வயதான பெண்ணின் உறுப்பு தானத்தை கௌரவிக்கும் வகையில் பினாங்கு மருத்துவமனை பச்சை நிற விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது.

ஐந்து பிள்ளைகளின் தாயான அப்பெண், உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததாக பினாங்கு சுகாதாரத்துறை தெரிவித்தது.

அவரது விருப்பத்தை மதித்து குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அவரது மரணம் மற்றும் உறுப்பு தானம் மூலம் பலருக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினரின் மன உறுதியும் தாராள மனப்பான்மையும் இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மலேசியர்களுக்கும் முன்மாதிரியாக அமையட்டும்.

“நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்படுத்தும் ஒரு கதாநாயகனாக நீங்களும் மாறலாம். தற்போது மைசெஜாதரா செயலி மூலம் உறுப்பு தான உறுதிமொழியை எளிதாகப் பதிவு செய்யலாம்,” என்றும் பினாங்கு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.