இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு அட்சரேகை 7.2 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 117.2 பாகை என்ற புவியியல் அமைவிடத்தில், 499 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தோனேசியாவின் மாதாரம் நகருக்கு வடகிழக்கே 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.








