Aug 18, 2026
Thisaigal NewsYouTube
16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

Share:

அரசாங்கத்தின் தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் வரை, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவும் பாரிசான் நேஷனலும் தங்களது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் என அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க பாரிசான் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபா, ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக போட்டியிட்ட போதிலும், அந்த முடிவுகளை ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இருந்து விலகுவதற்கான காரணமாக பாரிசான் நேஷனல் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அளவில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, கூட்டரசு மட்டத்தில் நல்ல ஒத்துழைப்பை தொடர முடியும் என்றும் முகமது காலித் நோர்டின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

16-வது பொதுத்தேர்தலானது முக்கிய அரசியல் முடிவுக்கான அடுத்தக்கட்ட தருணமாக இருக்கும் என்றும், அதுவரை பக்காத்தான் ஹராப்பானுடனான கூட்டரசு ஒத்துழைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஜனவரி முதல் ஜோகூர் - சிங்கப்பூர் இடையிலான ஆர்.டி.எஸ் இணைப்பு / சில வினாடிகளில் குடிநுழைவுச் சோதனைகளை நிறைவு செய்யும்

ஜனவரி முதல் ஜோகூர் - சிங்கப்பூர் இடையிலான ஆர்.டி.எஸ் இணைப்பு / சில வினாடிகளில் குடிநுழைவுச் சோதனைகளை நிறைவு செய்யும்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை