Aug 18, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கிள்ளானில் கடந்த மாதம் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின்போது, ‘ராக்கி’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 24 வயதான ஷா ஹிஜாம் மீது வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

கால்நடை சேவைகள் துறை சார்பில் ஷா ஹிஜாம்-க்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்களான ரஃபீக் ரஷீத் அலி மற்றும் மஹ்மூத் அப்துல் ஜூமாட் தெரிவித்தனர்.

எனினும், எந்தச் சட்டத்தின் கீழ் அல்லது எந்தப் பிரிவின் கீழ் ஷா ஹிஜாம் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த ஜூலை 29-ஆம் தேதி போர்ட் கிள்ளானில், கிள்ளான் மாநகராட்சி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ராக்கி உயிரிழந்தது.

இந்த நடவடிக்கையில் தாம் பங்கேற்றதை ஷா ஹிஜாம் ஒப்புக்கொண்டிருந்தாலும், நாயை காயப்படுத்தவோ கொல்லவோ வேண்டும் என்ற நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என மறுத்திருந்தார்.

ராக்கி-யின் மரணம் தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.