அரசாங்கத்தின் சும்பாங்கன் துணாய் ரஹ்மஹ் எனும் ரொக்க உதவித் தொகையை பெற்று வருகின்ற 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் , வரும் திங்கட்கிழமை முதல் தலா 600 வெள்ளி மதிப்பிலான பொருள் உதவியை பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அடிப்படை அத்தியாவசிய உணவுப்பொருட்களை உள்ளடக்கிய 600 வெள்ளிக்குரிய பொருட்கள் சும்பாங்கன்அஸஸ் ரஹ்மஹ் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்படவிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


