Mar 13, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.20-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவது குறித்து மருத்துவக் குழுவினர் திருப்தி தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களாக தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் துன் மகாதீர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு ஏற்பட்ட இடுப்பு எலும்பு முறிவிற்காக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார்.

துன் மகாதீரின் உடல்நல முன்னேற்றம் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து நிபுணர்கள் திருப்தி கொண்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் முழுமையாக குணமடைவதற்கான 'பிசியோதெரபி' (Physiotherapy) மீட்புச் செயல்முறை இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன