கோலாலம்பூர், ஜூலை 10-
ஊழியர் சேமநிதி வாரியம் - EPF-ப்பில் பதிவு பெற்றுள்ள 55 வயதுக்கும் குறைவான 13.01 மில்லியன் சந்தாதாரர்களில், 27.8 விழுக்காட்டினர் அதாவது 3.61 மில்லியன் பேர், கடந்த ஜூன் 24ஆம் தேதி வரையில் மொத்தம் 11.52 பில்லியன் தொகையை, தத்தம் மூன்றாம் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.
அவர்களில், சுமார் 3.16 மில்லியன் சந்தாதாரர்கள், மூன்றாம் கணக்கின் வாயிலாக, மொத்தம் 7.81 பில்லியன் வெள்ளியை மீட்டுக்கொண்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நடப்பில், பல்வேறு நிதி சார்ந்த சவால்களை எதிர்நோக்கிவரும் மக்கள், அவர்களது சேமிப்பு நிதியை மீட்டுக்கொள்வதற்கு ஏதுவாக, அரசாங்கம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.








