சபாவின் புகழ்பெற்ற குனோங் கினபாலு மலையில் நிலவும் கடும் குளிரால், கடல் மட்டத்திலிருந்து 3,272 மீட்டர் உயரத்தில் உள்ள பனாலபன் பகுதியில் இன்று அதிகாலை உறைபனி உருவானது.
வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பநிலை குறைவு காரணமாகத் தாவரங்களின் மீது மெல்லிய பனிப்படலங்கள் படர்ந்துள்ள அரிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், நிலவும் கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ளப் போதுமான கம்பளி உடைகளை அணியுமாறும், பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் மலையேறுபவர்களுக்குச் சபா பூங்காக்கள் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மலையேற்றத்தின் போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுமாறும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








