Aug 21, 2026
Thisaigal NewsYouTube
கேசியா நிஷா தற்கொலை விவகாரம் ; விசாரணையை விரைவுப்படுத்த கல்வி அமைச்சர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

கேசியா நிஷா தற்கொலை விவகாரம் ; விசாரணையை விரைவுப்படுத்த கல்வி அமைச்சர் உத்தரவு

Share:

ஒர் இடைநிலைப்பள்ளியில் மிரட்டல், இனவெறித் துன்புறுத்தலுக்கு ஆளான 14 வயது மாணவி கேசியா நிஷா தற்கொலை செய்துக் கொண்ட வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்த கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உத்தரவிட்டுள்ளார்.

அம்மாணவியின் மரணம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குடும்ப உறுப்பினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர், இதுபோன்ற இனரீதியிலான துன்புறுத்தல்கள் பள்ளிகளில் களையப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில், போலீஸ், சமூகநலத்துறை மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து, அமைச்சு செயல்பட்டு வருகிறது.

அனைவருக்கும்ம் நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, பாகுபாடற்ற பாதுகாப்பான கல்வி சூழலை உருவாக்குவதே தங்களின் முன்னுரிமை எனவும் ஃபத்லினா சிடெக் உறுதியளித்தார்.

Related News