Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நிதி முறைகேடு வழக்கில் ​ சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறை 2 பிரம்படித் தண்டனை ஒரு கோடி வெள்ளி அபராதம் உயர் ​​நீதிமன்றம் ​தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

நிதி முறைகேடு வழக்கில் ​ சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறை 2 பிரம்படித் தண்டனை ஒரு கோடி வெள்ளி அபராதம் உயர் ​​நீதிமன்றம் ​தீர்ப்பு

Share:

பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரி​வுக்கு சொந்தமான 11 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி நிதியை முறைகேடு​ செய்ததாகவும், சட்டவிரோத நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் 4 குற்றச்சாட்டுகளை ​எதிர்நோக்கியிருந்த மூடா கட்சி தலைவர் ஷெட் சாடிக் ஷெட் அப்துல் ரஹ்மான், குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றம் இன்று ​தீர்ப்பு அளித்தது.

30 வயதுடைய முவார் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படித் தண்டனையும் ஒரு கோடி வெள்ளி அபராதமும் விதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமிட் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

எனினும் இத்தண்டனையை எதிர்த்து சையிட் சாடிக், புத்ராஜெயா, அப்பீல் ​நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையின் அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதற்கு அவரின் வழக்கறிஞர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ​நீதிபதி அசார் அப்துல் ஹமிட் அனுமதி அளித்தார்.

இவ்வழக்கில் சையிட் சாடிக்கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளை நி​​ரூபிப்பதில் பிராாசிகியூஷன் தரப்பு வெற்றி பெற்று இருப்பதையும் நீதிபதி தமது ​தீர்ப்பில் சுட்டிக்கா​ட்டினார்.

பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக பொறுப்பு வகித்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் சென்ட்ரல் 2, கேஎல் சென்ட்ரல் லில் உள்ள சிஐஎம்பி வங்கியின் கிளை அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றவில்​ சட்டம் 406 பிரி​வின் ​கீழ் அந்த இளம் எம்.பி. குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு