Jul 4, 2026
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட் உதவித் தொகையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள், அது கம்பத்து மக்களுக்கு அத்தியாவசியத் தேவை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட் உதவித் தொகையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள், அது கம்பத்து மக்களுக்கு அத்தியாவசியத் தேவை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

Share:

புத்ராஜெயா, ஜூலை.24-

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு முறை வழக்கப்படக்கூடிய 100 ரிங்கிட் உதவித் தொகையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சில தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அந்த 100 ரிங்கிட் தொகை சில தரப்பினருக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது கம்பத்து மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாகும் என்று பிரதமர் விளக்கினார்.

எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா மற்றும் சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ஆகிய உதவித் திட்டங்களுக்குக் கூடுதலாக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 13 பில்லியனில் இருந்து 15 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே நாடு முழுவதும் உள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சுமார் 22 மில்லியன் பேருக்கு இந்த 100 ரிங்கிட் நிதி உதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் விளக்கினார்.

வெறும் 100 ரிங்கிட்தானா என்று சிலர் இளக்காரமாகக் கேட்கலாம். அவர்கள் மாதத்திற்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். அந்த 100 ரிங்கிட் அவர்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான கம்பத்து மக்களுக்கு அந்த 100 ரிங்கிட், அத்தியாவசியத் தேவையாகும் என்று இன்று நிதி அமைச்சு பணியாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது உரையாற்றுகையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது