ஜோகூர், பத்து பஹாட், பெங்குலு லினாவ் வளாகம் அருகில் யோனோ பெங் தெரு சாலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அச்சம்பவம் தொடர்பில் புதிய தடயங்கள் மேற்கோள் காட்டுப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த எலும்புக்கூட்டிற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 17 வயது இளைஞர் ஹாபிஸ் ஃபௌஸான் அப்துல் ஹாலித் என்பவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் போன்று அது இருப்பதாக கூறப்படுகிறது.
டுரியான் தோட்டத்தில் இரு மரங்களுக்கு இடையில் அந்த மோட்டார் சைக்கிள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 25 ஆம் தேதி Tongkang Pechaj, Parit Ju என்ற இடத்தில் தனது நண்பருடன் பந்து விளையாட்டைப் பார்க்கப் போவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற அந்த இளைஞர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








