Jun 6, 2026
Thisaigal NewsYouTube
இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்
தற்போதைய செய்திகள்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

Share:

சேமிப்பு என்பது இன்றைய, நாளைய அல்லது நாளைய மறுநாள் தேவைக்கானது அல்ல; அது எதிர்காலப் பாதுகாப்பு!" என்கிறார் பிஎஸ்என் குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட் வென்று சாதனை படைத்துள்ள பினாங்கு வரலாற்று ஆசிரியர் முனீஸ்வரன் மணியம். 1989-ஆம் ஆண்டு முதல், தமது பணி ஓய்வுக்குப் பிந்தைய தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு, அடுத்த 30 ஆண்டுகாலத் தொலைநோக்குப் பார்வையோடு அவர் சேமிக்கத் தொடங்கியதே இந்த மெகா வெற்றிக்குக் காரணம் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

பரிசுத் தொகை கிடைத்த பிறகும், கார் வாங்கும் ஆசை இருந்தாலும், அதனை மீண்டும் சேமிப்பிலேயே முதலீடு செய்யத் துணிந்துள்ளார் இந்த 56 வயது ஆசிரியர். மாதாந்திர நேரலைகளைத் தவறாமல் பார்த்து, பிஎஸ்என் அதிகாரியின் ஊக்கத்தோடு சாதித்த முனீஸ்வரனின் இந்த நீண்டகாலத் திட்டமிடல், இன்றைய தலைமுறைக்கு ஒரு மிகச்சிறந்த சேமிப்புப் பாடமாகும்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு