2022 ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் 1,184 மாணவர்கள் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளியான 4.00 சி.ஜி.பி.எ வைப் பெற்று மகத்தான சாதனைப் படைத்துள்ளனர். எஸ்.டி.பி.எம். தேர்வு வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 874 மாணவர்கள் 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்றுள்ளனர் என்று மலேசிய தேர்வு மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர். முகமட் எக்வான் டோரிமன் தெரிவித்தார்.
4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்ற 1,184 மாணவர்களில் 1,009 பேர் அல்லது 85.22 விழுக்காட்டினர் B40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று இன்று 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் Dr டாக்டர். முகமட் எக்வான் டோரிமன் குறிப்பிட்டார்.
தவிர 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சி.ஜி.பி.எ புள்ளி , 2.82 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் தேசிய சி.ஜி.பி.எ புள்ளி 2.79 ஆக பதிவாகியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம். சோதனையை நாடு தழுவிய நிலையில் 41 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதியிருந்தனர்.

தற்போதைய செய்திகள்
எஸ்.டி.பி.எம். தேர்வில் அதிகமான மாணவர்கள் 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்று மகத்தான சாதனை
Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


