கோவிட் -19 நோய் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முககவசத்தை அணிந்து செல்லுமாறு பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு இன்று அறிவுறுத்தியுள்ளது.
3S ( மூன்று எஸ் ) என்று அழைக்கப்படும் நெரிசல்மிக்க பகுதிகள், மக்கள் நிறைந்த குறுகிய இடங்கள் மற்றும் மக்களுடன் பேசும் போது முககவசத்தை அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டிசுல்கிஃப்லி அஹ்மாட் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.







