Jul 4, 2026
Thisaigal NewsYouTube
இலங்கை பிரஜையை கேஎல்ஐஏ வழியாகக் கடத்த முயற்சி: மூவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இலங்கை பிரஜையை கேஎல்ஐஏ வழியாகக் கடத்த முயற்சி: மூவர் மீது குற்றச்சாட்டு

Share:

கிள்ளான், ஆகஸ்ட்.07-

கடந்த ஜூலை மாதம், இலங்கை பிரஜை ஒருவரைக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வாயிலாக கடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்ததாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இரு மலேசியர்களான 27 வயது சந்தியா தர்ஷினி, 46 வயது ஜனார்த்தனன் அப்புப்பிள்ளை மற்றும் ஒரு இலங்கைப் பிரஜையான 48 வயது விதிவரன் பழனி ஆகிய மூவர் நீதிபதி முகமட் சப்ரி இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ளும் வகையில் மூவரும் தலையை ஆட்டினர்.

இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதால் அந்த மூவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜுலை 10 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முனையம் ஒன்றின் வாயிலாக இலங்கை பிரஜை ஒருவரைக் கடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக மூவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 15 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் ஆள் கடத்தல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்