திரெங்கானு, பேசுட், புலாவ் பெர்ஹெந்தியான் தீவுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மாதுவும் அவரின் மகனும் 2 பேரப் பிள்ளைகளும் பாதுகாப்பாக வீடு திரும்பினர். அந்ந நாலவரும் ஜோகூர், குளுவாங்கிலுள்ள தங்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக திரும்பியதை போலீசார் உறுதிபடுத்தினர்.
52 வயது சுரைடா அப்துல் கானி, அவரின் 21 வயது மகன் முஹமாட் அல்மான் முஹமாட் ராஃபி, இரண்டு பேரப்பிளைகளான 7 வயது சாசா அலிஷா, 4 வயது முஹமாட் சைஃபுல் ஆகியோர் நேற்று மாலை 3 மணியளவில் வீடு திரும்பியதாக பேசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அப்துல் ராசாக் முஹமாட தெரிவித்தார்.இதற்கு முன்பு இந்த நால்வரும் காணாமல் போனதாக போலீஸ் புகார் ஒன்றை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். குடும்பத்தினருன் விடுமுறையை கழிப்பதற்காக புலாவ் பெர்ஹெந்தியான் தீவுக்கு சென்ற அவர்களுடன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து தொடர்பு கொள்ள இயலவில்லை என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் செய்து இருந்தனர்.
அந்த உல்லாசத் தீவில் படகு சவாரியின் போது கைப்பேசி, தவறுதலாக நீரில் விழுந்து விட்டதால், அது செயலிழந்த நிலையில் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அப்துல் ரசாக் தெரிவித்தார்.







