தேசிய விசாக தினக் கொண்டாட்டத்தையொட்டி, எதிர்வரும் மே 23-ஆம் தேதி முதன்முறையாக புத்த சமயக் கொள்கைகள் மற்றும் “மடானி” நடைமுறைகள் குறித்த தேசிய மாநாடு நடத்தப்பட உள்ளது.
“ஞானமும் நாகரிகமும் இணையும் பயணம்: புத்த சமயக் கொள்கைகள் & மடானி நடைமுறைகள்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில், சமயத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மலேசியா மடானி கொள்கைகளுடன், புத்த மத போதனைகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விவாதிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிகழ்வானது சமயங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கு, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.








