Mar 13, 2026
Thisaigal NewsYouTube
"புலி வருது, சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" - பேராக் தோட்டப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ
தற்போதைய செய்திகள்

"புலி வருது, சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" - பேராக் தோட்டப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய வைரல் வீடியோ

Share:

ஈப்போ, ஜனவரி.16-

"புலி இருக்கிறது, கவனமாக இருங்கள், சீக்கிரம் காரில் ஏறுங்கள்" - சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நிமிட வீடியோவில் பதிவாகியுள்ள இந்த எச்சரிக்கை குரல்கள், மலாயா புலியை நேருக்கு நேர் சந்தித்த போது நிலவிய பயங்கரமான சூழலை வெளிப்படுத்துகின்றன.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி காலை 10.30 மணியளவில், செமோர் (Chemor), புக்கிட் கிண்டி பகுதியில் உள்ள ஒரு டுரியன் தோட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பேராக் மாநில மலாயா புலி பாதுகாப்பு பிரிவின் குழுவினரான UKHM பொறுப்பாளர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, புலி ஒன்று இவர்களை நோக்கி முன்னேறி வந்துள்ளது. குழுவினர் கம்புகளை வைத்தும், சத்தம் எழுப்பியும் புலியை விரட்ட முயன்றனர். ஆனால், புலி சற்றும் அஞ்சாமல் அவர்களை நோக்கி நெருங்கி வந்துள்ளது.

புலி மிக அருகில் வந்ததைக் கண்ட அதிகாரிகள், "புலி... புலி... சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" என ஒருவருக்கொருவர் எச்சரித்துக் கொண்டு, அருகில் நின்றிருந்த டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தை நோக்கி ஓடினர்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரையும், வாகனத்தை விட்டு விட்டு உடனே காருக்குள் ஏறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அனைவரும் பாதுகாப்பாக வாகனத்திற்குள் ஏறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட அதே புலி, பின்னர் புக்கிட் கிண்டி பகுதியில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை வைத்த பொறியில் சிக்கியது. சுமார் 2 வயது மதிக்கத்தக்க, 75 கிலோ எடை கொண்ட அந்தப் புலி தற்போது ஆரோக்கியமாக உள்ளது. மேல் நடவடிக்கைக்காக அது சுங்காய் தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆபத்தான சூழலிலும் அமைதியாகவும் துரிதமாகவும் செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்றிய UKHM குழுவினரின் செயலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்