Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெண் முதலாளி வெட்டிக்கொலை, பணியாளர் கைது
தற்போதைய செய்திகள்

பெண் முதலாளி வெட்டிக்கொலை, பணியாளர் கைது

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.4
பேரா, மெங்லெம்பு அருகில் தாமான் ராசி ஜெயா என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் நடந்த வெட்டுக் கத்தி தாக்குதல் சம்பவத்தில் அந்த கடையின் பெண் முதலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரின் ஆண் நண்பர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அந்த கடையின் வளாகத்தில் நிகழ்ந்தது. இதில் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளான 40 வயது பெண் முதலாளி அந்த கடையிலேயே உயிரிழந்தார்.

அவரின் 42 வயது ஆண் நண்பர் கடும் வெட்டுக்காய்ஙகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் அந்த கடையில் வேலை செய்த பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடையின் பெண் முதலாளிக்கும், பணியாளருக்கும் இடையில் பணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அந்த பணியாளர், முதலாளியை வெட்டிக்கொன்று இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது..

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்