ஜொகூர் , அக்டோபர் 07-
போலீஸ் அதிகாரிக்கு 18 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக உணவக உரிமையாளர் ஒருவர், ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
51 வயது சியோ போ கியோங் என்ற அந்த உணவக உரிமையாளர் கடந்த ஜுன் 19 ஆம் தேதி பாசீர் கூடாங், தமன் ஏர் பிரு-வில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பபட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த வர்ததகர் விசாரணை கோரியதால் அவர், 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.








