May 24, 2026
Thisaigal NewsYouTube
33 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

33 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 08-

GRO போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 33 அந்நிய நாட்டுப்பெண்களை குடிநுழைவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை பேராக், கிந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் கெகர், ஓபிஎஸ் செளரா மற்றும் ஓபிஎஸ் மின்யாக் ஆகிய பெயர்களில் கேளிக்கை மையங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தகத் தளங்களை இலக்காக கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பேரா மாநில இயக்குநர் Meor ஹிஸ்புல்லாஹ் Meor அப்துல் மாலிக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் வியட்நாம் பிரஜைகள் ஆவர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News