மாணவர் ஒருவரை மானப்பங்கம் செய்ததாக ரொஹின்யா இனத்தைச் சேர்ந்த சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர், இன்று கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
58 வயதுடைய அபு தோயுப் உமோர் அப்பாஸ் என்ற அந்தச் சமய ஆசிரியர் கடந்த ஏப்ரல் முதல் தேதி, கிளந்தான், கடொக், கம்போங் பதேக் தாலாங்கில் உள்ள சமயப் பள்ளியில், 11 வயதுடைய ரொஹின்யா மாணவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தச் சமய ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


