May 6, 2026
Thisaigal NewsYouTube
இஸ்கண்டாரிடம் நாளை வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

இஸ்கண்டாரிடம் நாளை வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நாளை வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யவிருக்கிறது.

ஷாம்சுல் இஸ்கண்டாரிடம் 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டைத் தாம் லஞ்சமாகக் கொடுத்ததாக வர்த்தகர் ஆல்பெர்ட் தே, அண்மையில் பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமரின் அந்த முன்னாள் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் மூவர் விசாரணைக்கு அழைக்கப்படவிருக்கின்றனர். அவர்களில் வாக்குமூலம் அளிப்பதற்கு தானாக முன்வந்துள்ள சோஃபியா ரினி புயோங் என்ற மாதுவும் ஒருவர் ஆவார் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

அந்த வர்த்தகரிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு ஷாம்சுல் இஸ்கண்டாரின் பினாமியாகச் செயல்பட்டதாகக் கூறப்படுவதை அந்த மாது நேற்று நிராகரித்தார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்