Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Share:

ஈப்போவில் உள்ள தாமன் ராப்பாட் பெர்டானா பகுதியில் இன்று காலை திறந்த வெளி நிலத்தில், கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட், மின் கோபுரம் அருகே நடந்த இச்சம்பவம் குறித்து இன்று காலை 10 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அங்கு மூன்று ஆண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News