புத்ராஜெயா, ஆகஸ்ட்.03-
துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் விரைவில் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN-இல், இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது ஃபாடில்லா யூசோஃப் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் Misiah Taib வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சையும் அதனைத் தொடர்ந்து குணமடையும் காலக்கட்டமும் தடையின்றி நடைபெறுவதற்காக, அவர் முழுமையான ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் வழக்கம் போல் தனது அரசாங்கப் பொறுப்புகளைத் தொடர பொதுமக்கள் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.








