May 18, 2026
Thisaigal NewsYouTube
420 புகார்கள் பெறப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

420 புகார்கள் பெறப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், ஜூன்.29-

மானியம் வழங்கப்படும் சமையல் எண்ணெய் தொடர்பாக இதுவரை 420 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 43 புகார்கள் பதுக்கல் தொடர்பானவை.

மேலும், அதிக விலைக்கு விற்றல், விற்க மறுத்தல், போதிய இருப்பு இல்லாமை, நிபந்தனையுடன் விற்றல், வெளிநாட்டவருக்கு விற்றல், விலைக் குழப்பம், கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மீதமுள்ள 377 புகார்களில் அடங்கும். சில்லறை விற்பனையாளர்களுக்கு உரிமம் இல்லாதது, தகுதியற்றவர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வது, பண்டிகைக் காலங்களில் அதிகத் தேவை ஆகியவை தட்டுப்பாட்டிற்குக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என அமைச்சின் செயலாக்கப் பிரிவின் இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.

சமையல் எண்ணெய் முறைகேடுகளைத் தடுக்க விநியோகச் சங்கிலி முழுவதும் கடுமையானச் சோதனைகளையும், விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக அமைச்சு கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் நியாயமான முறையில் மானிய விலையிலான சமையல் எண்ணெய் மக்களுக்குக் கிடைப்பதை உறுதிச் செய்ய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது என டத்தோ அஸ்மான் அடாம் மேலும் கூறினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி