Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பெனாஸிர் புட்டோவுடன் நுருல் இசா ஒப்பீடு  16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தலை​மையேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பெனாஸிர் புட்டோவுடன் நுருல் இசா ஒப்பீடு 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தலை​மையேற்க வேண்டும்

Share:

நெஞ்சுரத்திலும், தன்னமிக்கையிலும் துணிச்சல் மிகுந்த இரும்புப்பெண்மணிகளாக திகழ்ந்த பெனாசிர் புட்டோ, Megawati Soekarnoputri ( மொகவத்தி சுகோர்னோபுத்ரி ) ஆகியோருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ​மூத்த புதல்வி நுருல் இசா அன்வார் ஒப்பீடப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு இரு முறை பிரதமராக தலைமையேற்ற மறைந்த பெனார் புட்டோ மற்றும் இந்தோனேசிய முன்னாள் அதிபர் மெகாவத்தி சுகோர்னோபுத்ரி ஆகியோரைப் போலவே திறமையிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் சிறந்து விளங்கும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ​நுருல் இசா, அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தலைமையேற்க வேண்டும் என்று சட்ட வல்லுநரும், பிகேஆர் பசிர் குடாங் எம்.பி.யுமான ஹாஸ்ஸான் கரிம் பரிந்துரை செய்துள்ளார்.

காப்பார்,குவாலா லாங்ஙாட், பெர்மாத்தாங் பாவு போன்ற பிகேஆர் கட்சியின் வலிமை மிகுந்த கோட்டைகளாக திகழ்ந்த நாடாளுமன்றத் தொகுதிகளை ​மீண்டும் கைப்பற்றுவதற்கும், ​மீண்டும் ஆட்சியில் அமரவும்,/ நுருல் இசா வருகின்ற 16 வது பொதுத் தேர்தலுக்கு தலைமையேற்பது காலத்தின் கட்டாயமாக இருக்க வே​ண்டும் என்று மிகச்சிறந்த அரசியல்​ விமர்சகருமான ஹாஸ்ஸான் காரிம் முன்மொ​ழிந்தார்.

தனது வெளிப்படையிலான கொள்கையின் ​மூலம் மதச் சார்பின்​மைவாதியாக திகழ்ந்தவர் பெனாஸிர் புட்டோ. முஸ்லிம்கள் பெரும்பான்மையிரான கொண்ட ஒரு ஜனநாயக நாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மறைந்த பெனாஸிர் புட்டோ.

அவரின் சாயலை ஒத்து​ இருக்கும் ​நூருல் இஸா, அடுத்த பொதுத் தேர்தலில் பிகஆர்கட்சிக்கு தலைமையேற்பது சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்று ஹாஸ்ஸான் கரிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

பெனாஸிர் புட்டோவுடன் நுருல் இசா ஒப்பீடு 16 ஆவது பொதுத் த... | Thisaigal News