Aug 10, 2026
Thisaigal NewsYouTube
4 டத்தோக்கள் கைது - 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான ரொக்கப் பணம், சொத்துக்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

4 டத்தோக்கள் கைது - 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான ரொக்கப் பணம், சொத்துக்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

ஸ்கேம் மோசடிகள் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட மிகப் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையில், டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன் கிட்டத்தட்ட 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட்ட ஓப்ஸ் நோதர்ன் ஸ்டார் சோதனை நடவடிக்கையின் வாயிலாக 44 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 டத்தோக்களும் அடங்குவர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

அனைத்துலக போலீஸ் துறையான இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் , மிகப் பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஐஜிபி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டர்களின் 300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன என்று டான்ஶ்ரீ ரஸாருடின் விளக்கினார்.

வெளிநாட்டைத் தளமாகக் கொண்டு பெலாபுரான் எம்பிஐ வாயிலாக முதலீடு செய்யப்பட்டு சட்டவிரோதமாகக் கிடைக்கப் பெற்ற பணத்தின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள் இந்த சொத்துக்களை வாங்கியதாக நம்பப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

கைது செய்யப்பட்ட 4 டத்தோக்களில் இருவர் தொழில் அதிபர்கள் ஆவர். மற்ற இருவர், வழக்கறிஞர்கள் ஆவர் என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

மொத்தம் 116 கோடி ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கொண்ட 638 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள வேளையில் 200 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய 35 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டான்ஶ்ரீ ரஸாருடின் தெளிவுபடுத்தினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

4 டத்தோக்கள் கைது - 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான ரொக... | Thisaigal News